சிம்பு

செய்தியாளர்களிடம் பேசிய நடிகரும் இயக்குநருமான டி.ராஜேந்தர், செய்தியாளர்களிடம் “வரும 28ம் தேதி முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன். அது என் வாழ்வில் மிக முக்கியமான தாக இருக்கும். இதுவரை சத்திரியானக இருந்த நான் சாணக்கியனாக மாறப்போகிறேன்” என்றார்

 

மேலும், “திரைத்துறையைவிட அரசியல் ஆபத்தானது. ஆகவேதான் எனது மகன் நடிகர் சிம்புவை அரசியலுக்கு விடவில்லை. ஆனால் அது அவரது விருப்பம்” என்றார்.

இந்த நிலையில் நடிகர் சிம்பு, “தமிழர்களுக்கு ஒரு பிரச்னை எல்லோரும் ஒன்றாக வேண்டும் என்கிற  தருணம் வரும்போது நான் அரசியலுக்கு வருவேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஆக, கமல், ரஜினி அரசியலுக்க வந்துவிட்டார்கள். அதே போல விஜய், விசால் ஆகியோர் வர இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சிம்பவும் அரசியலுக்கு வரக்கூடும் என்று கூறப்படுகிறது.