தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரும், பாப்டா திரைப்பட பயிற்சி மையத்தின் நிறுவனருமான தனஞ்செயனுக்கு மும்பை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

தனஞ்செயன் தமிழ் சினிமாவின் வரலாறு குறித்து எழுதிய ‘பிரைட் ஆப் தமிழ் சினிமா’ புத்தகத்திற்கு சிறந்த புத்தகத்திற்கான தேசிய விருது வழங்கப்பட்டிருப்பதோடு, சிறந்த விமர்சகருக்கான தேசிய விருதும் அவர் பெற்றிருக்கிறார்.

”இந்திய சினிமாவின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு செய்ய வேண்டியவை” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை மேற்கொண்டுள்ளார் தனஞ்செயன்

தற்போது, இந்த ஆய்வறிக்கைக்காக மும்பை கல்கலைக்கழகம் தயாரிப்பாளர் தனஞ்செயனுக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.