சென்னை:
டல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தமிழருவி மணியன் ஓய்வில் இருக்க மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் உடல் நலக்குறைவால் கடந்த 25 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பினார்.

இந்நிலையில், காந்திய மக்கள் இயக்க மாநிலச் செயல் தலைவர் மரு. டென்னிஸ் கோவில் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில், காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் உடல் நலக்குறைவால் கடந்த 25 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று இன்று வீடு திரும்பினார். இருப்பினும், அவரது உடல் நிலை முற்றிலும் தளர்ந்து இருப்பதால், குறைந்தது 1 மாத காலமாவது அவர் ஒய்வில் இருப்பது அவசியம் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். இதனால் அவரை ஒரு மாத காலம் நேரிலோ, தொலைபேசியிலோ தொடஸ்ர்பு கொள்ள முயல வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.