மும்பை:

ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் டாக்டர்கள் நக்சல் அமைப்பில் இணைந்துவிட வேண்டும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹன்ஸ்ராஜ் அஹிர் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா சந்திரப்பூரில் நடந்த மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்ட ஹன்ஸ்ராஜ் அஹிர் பேசுகையில், ‘‘நான் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அமைச்சர். நான் மருத்துவமனைக்கு வருவது தெரிந்தும் டாக்டர்கள் ஏன் விடுப்பில் சென்றார்கள்?.

அவர்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றால் நக்சல் அமைப்பில் சேர வேண்டும். அப்போது நாங்கள் அவர்களை நோக்கி துப்பாக்கி தோட்டக்களை செலுத்துவோம்’’ என்றார்.