கேரள மாநிலம் புதுப்பள்ளியை சேர்ந்த ரூபா குரியன் துபாயில் கடந்த 23 ஆண்டுகளாக செய்தியாளராக பணியாற்றி வருகிறார்.

ரூபாவுடன் அவரது மகள் மாளவிகாவும் துபாயில் வசித்து வந்தார். மாளவிகாவுக்கு அவரது தோழி ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்னர் நாய் ஒன்றை பரிசாக அளித்தார்.
அந்த நாய்க்கு ஸ்மர்ஃப் என்று பெயரிட்டு ஆசையாக வளர்த்து வந்தார், மாளவிகா.
அவருக்கு கேரளாவில் உள்ள சொந்த ஊரில் வரும் டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதற்காக ருபாவும் மாளவிகாவும் கடந்த ஜுன் மாதமே கேரளா வந்து விட்டனர்.
ஆனால் அப்போது ,நாயை அழைத்து வரமுடியவில்லை.
தன் திருமணத்தில் என்ன செலவானாலும் ஸ்மர்ஃப் பங்கேற்க வேண்டும் என்பதில் மாளவிகா உறுதியாக இருந்தார்.
இதையடுத்து நாய் ஸ்மர்ஃபை ஒரு லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவளித்து டிக்கெட் வாங்கி கேரளாவுக்கு கொண்டுவரச்செய்துள்ளனர்.
இப்போது 7 வயதாகும் ஸ்ம்ரஃப், துபாயில் இருந்து 26 மணி நேரம் விமானத்தில் பயணித்து கேரளா வந்து சேர்ந்துள்ளது.
-பா.பாரதி.