சென்னை:

மிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை வெளியே தலை காட்டாதீர்கள் என பொதுமக்களுக்கு சென்னை வானிலை மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் வெயிலின் தாக்கம் நீடித்து வருகிறது. பல மாவட்டங் களில் வெயிலின் அளவு 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தி வருகிறது.  வெயிலின் கொடுமை தாங்காமல் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர்.

இந்த நிலையில், மேலும் சில  நாட்களுக்கு கடும் வெப்ப அலை இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக த மிழகத்தின் வடமாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கடுமையான வெப்ப அலை வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து செய்திக் குறிப்பில் ‘திருவள்ளூர், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் வேலூர் ஆகிய சில வட மாவட்டங்களில் அடுத்த இரு தினங்களுக்கு வெயில் கடுமையாக இருக்கும். அதனால் 11 மணி முதல் 4 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்த்து சன் ஸ்ட்ரோக்கைத் தவிர்க்கவும்’ என அறிவித்துள்ளது.