ஈரோடு:

மைச்சர் செங்கோட்டையன் தன்னை யாரும் பார்க்க வரவேண்டாம் என்று தனது வீட்டின் முன்பு அறிவிப்பு வைத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமைச்சர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாரோ என, அறிவிப்பு பலகையை பார்ப்பவர்கள் சந்தேகம் கொண்டுள்ளனர்.

தமிழகத்திலும் கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில், வரும் 31ந்தேதி வரை   தன்னை யாரும் சந்திக்க வர வேண்டாம் என அமைச்சர் செங்கோட்டையனின் இல்லத்தின் முகப்பு கேட்டில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள குள்ளம்பாளையத்தில் அமைந்துள்ள அவரது வீட்டின் கேட்டில் இந்த போர்டு போடப்பட்டு உள்ளது.

இதைப்பார்க்கும் கட்சியினரும், அதிகாரிகளும், அமைச்சர் செங்கோட்டையனுக்கு கொரோனா பாதிக்கப்பட்டிருக்கலாம்… அதனால் இந்த அறிவிப்பு வைத்திருக்கலாம் என்று பேசி வருகின்றனர்…

உண்மை எதுவோ… அது அமைச்சருக்குத்தான் வெளிச்சம்…