பெர்லின்: இரண்டு மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஜெர்மனியில் துவங்கியது பண்டஸ்லீகா கால்பந்து திருவிழா.
ஆனால், அது பார்வையாளர் இல்லாத கால்பந்து திருவிழாவாகத் தொடங்கியது. ஜெர்மனியில் நடைபெறும் மிக முதன்மையான கால்பந்து போட்டியாகும் இந்த பண்டஸ்லீகா.
இந்த கால்பந்து விளையாட்டுத் தொடரில், ஸ்கால்கே அணியை, 4-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்தது டார்ட்மண்ட் அணி. டார்ட்மண்ட் அணியின் எர்லிங் ஹாலண்ட் மிகச் சிறப்பாக செயல்பட்டார்.
இந்தப் போட்டி பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது. இந்த பண்டஸ்லீகா என்பது ஜெர்மனியில் நடத்தப்படும் ஒரு முதன்மையான கால்பந்து போட்டியாகும். கொரோனா பரவலை ஜெர்மனி கட்டுப்படுத்தியிருந்தாலும், அங்கு நோய் பரவலின் இரண்டாம் அலைக்கான அறிகுறி தென்படுவதாக செய்திகள் வருகின்றன.
இந்நிலையில், பண்டஸ்லீகா கால்பந்து போட்டி, பார்வையாளர்கள் இல்லாமல் துவங்கியுள்ளது.