சென்னை,

மிழக அரசின் இரட்டை வரி விதிப்புக்கு எதிர்ப்பு சென்னையில் உள்ள சொகுசு திரையரங்குகள் ஐநாக்ஸ், பிவிஆர் இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

அதன் காரணமாக இந்த திரையரங்குகளில் திரைப்படங்கள் நிறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் மத்திய அரசு அமல்படுத்தி உள்ள  ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு  வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்  தமிழக அரசும் திரை அரங்குகளுக்கு கேளிக்கை வரியை விதித்துள்ளது.

தமிழ் திரைப்படங்களுக்கு 10 சதவிகிதமும், பிறமொழி படங்களுக்கு 20 சதவிகிதமும்  கேளிக்கை வரி விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இரட்டை வரி விதிப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இரட்டை வரி விதிப்பு முறையால் தங்களால் தொழில் செய்ய முடியாது என திரையரங்கு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இரட்டை வரி விதிப்பு முறையை எதிர்த்து சென்னையில் பிவிஆர், ஐநாக்ஸ் ஆகிய மல்ட்டிப்ளக்ஸ் திரையரங்குகள் இன்றுமுதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் திரைப்படக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.