கோவை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கோவையில் உள்ள அவரது சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

கோவை குனியமுத்தூர் பகுதியில் டாக்டர் கிருஷ்ணசாமிக்கு சொந்தமாக மருத்துவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையின் நிர்வாகத்தை அவரது மனைவி கவனித்து வந்தார்.

இந்நிலையில் கிருஷ்ணசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் நிர்வாகித்து வந்த சங்கீதா மருத்துவமனைக்கு சீல் வைக்கப்பட்டு, மருத்துவமனைக்கு செல்லும் பாதைகள் அடைக்கப்பட்டுள்ளது.

டாக்டர் கிருஷ்ணசாமியின் வீடு தனிமைப்படுத்தப்பட்டது என்று அவரது வீட்டின் முன்பு சுகாதாரத்துறையினர் நோட்டீஸ் ஒட்டி இருக்கின்றனர். டாக்டர் கிருஷ்ணசாமி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நாளை கொரோனா பரிசோதனை செய்யப்பட இருக்கிறது.