சென்னை,
ங்க கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டல் புயலாக உருவாகும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.
இதன் காரணமாக சென்னை மற்றும் கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
புதிதாக உருவாக இருக்கும் புயல், சென்னையை தாக்கும் என்றும், மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதுடன், மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த  வடகிழக்கு பருவமழை நேற்று வரை பொய்த்து போன நிலையில், ஏற்கனவே உருவான நாடா புயலும் நம்மை ஏமாற்றிவிட்டு நடந்தே சென்று விட்டது. இதன் காரணமாக பெரும் மழைய எதிர்பார்த்த மக்கள், மழை இல்லாததால் சோகத்துக்கு ஆளாகினர்.
strom1
ஆனால், தற்போது  வங்க கடல் பகுதியில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. இது அடுத்த 2 நாளில் புயலாக மாறுகிறது என்றும், இந்த காற்ற ழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறினார், அதற்கு  ‘வர்தா’  என்று பெயரிடப்படும் என கூறப்ட்டுள்ளது.
இந்த புயல், முதலில் நாளை (வெள்ளிக்கிழமை) அந்தமான்-நிகோபார் தீவுகளைத் தாக்கும் என்றும்,  அங்கு மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்படு கிறது. 25 செ.மீ. அளவுக்கு கனத்த  மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வெள்ளப்பெருக்கு,  நிலச்சரிவு, மின்சார துண்டிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்களும் உருவாக வாய்ப்பு cள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
அந்தாமானை தாக்கும் புயல் அப்படியே வந்து….  சென்னை யும், ஆந்திர கடலோர பகுதியும் அமைந்துள்ள கிழக்கு இந்தியா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக வரும் 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ‘வர்தா’ புயல், சென்னைக்கும், ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்துக்கும் இடையே கரையை கடக்கலாம் என எதிர்பார்ப்பதாகவும் அப்போது, மணிக்கு 130 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்து உள்ளது.
100 கி.மீ. தொலைவு வரை உள்ள இடங்களிலும் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும். இந்த பலத்த காற்று காரணமாக, மின் கம்பங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு சேதம் ஏற்படக்கூடும்.
இந்த  ‘வார்தா’ புயலால், சென்னையில் 11-ந் தேதியும், 12-ந் தேதியும் மிக பலத்த மழை பெய்யும் என்று தெரிகிறது. சென்னை மட்டுமின்றி, ஆந்திர மாநிலத்தின் நெல்லூர், ஓங்கோல், காக்கிநாடா, விசாகப்பட்டினம் ஆகிய ஊர்களிலும் புயலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி நிபுணர் ஆடம் டவுட்டி தெரிவித்துள்ளார்.
strom4
இந்த புயல் காரணமாக, விசாகப்பட்டினம், மசூலிப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும், காக்கிநாடா உள்ளிட்ட துறைமுகங்களில் 5-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இந்த புயல் குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. அது விசாகப்பட்டி னத்தில் இருந்து தென் கிழக்கில் 1,180 கிலோமீட்டர் தூரத்தில் மையம் கொண்டிருக்கிறது. அந்த மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறுகிறது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று அதற்கடுத்த 24 மணி நேரத்தில் (நாளை காலை 8.30 மணிக்குள்) புயலாக மாறுகிறது.
stom-flag
இதன் விளைவாக, அடுத்த 24 மணி நேரத்தில், அந்தமான்-நிகோபார் தீவுகளின் சில இடங்களில் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யக்கூடும். அந்தமான் தீவு மற்றும் வடக்கு ஆந்திராவை ஒட்டிய கடல் பகுதிகளில், கடல் கொந்தளிப்பாக காணப்படும். எனவே, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்.
அந்த புயல், தமிழ்நாட்டை நோக்கி வருகிறதா? என்பதையும், அது நகரும் பாதையையும் கண்காணிக்கிறோம்.
புயல் உருவாகி வருவதை மீனவர்களுக்கு அறிவிக்கும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் நேற்று முன்தினம் இரவு 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
கடலூர், புதுச்சேரி மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுவடையும்போது கடல் கொந்தளிப்பாக இருக்கும் என்பதால், மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.