சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாளை மீண்டும் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தடைக்கு தடை விதித்ததுடன், டாஸ்மாக் கடைகளை திறக்க பச்சைக்கொடி காட்டியது.
வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ஒரு மாநிலத்தில் மது விற்பனை செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அதில் நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை.
எனவே, மதுபானம் விற்பனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகள் அனைத்தையும் தளர்த்துவதாகவும், மதுவாங்க வருவோர், ஆதார் கொண்டு வர வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அனைத்து நிபந்தனைகளயும் தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட வேண்டுமே தவிர, நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்றும் கடுமையாக கருத்து தெரிவித்து உள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 நாட்களும், ஒவ்வொரு வண்ணங்களில் ஆன 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து, நாளை மீண்டும் கடைகள் திறக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை மூடுமாறு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றத்தின் தடைக்கு தடை விதித்ததுடன், டாஸ்மாக் கடைகளை திறக்க பச்சைக்கொடி காட்டியது.
வழக்கின் விசாரணையைத் தொடர்ந்து, கருத்து தெரிவித்த உச்சநீதி மன்றம், ஒரு மாநிலத்தில் மது விற்பனை செய்வது தொடர்பான விதிகளை உருவாக்கும் அதிகாரம் மாநில அரசுக்கே உள்ளது. அதில் நீதிமன்றங்கள் தலையிட தேவையில்லை.
எனவே, மதுபானம் விற்பனை தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த நிபந்தனைகள் அனைத்தையும் தளர்த்துவதாகவும், மதுவாங்க வருவோர், ஆதார் கொண்டு வர வேண்டும், சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என அனைத்து நிபந்தனைகளயும் தமிழக அரசு சார்பில் பிறப்பிக்கப்பட வேண்டுமே தவிர, நீதிமன்றம் பிறப்பிக்கக் கூடாது என்றும் கடுமையாக கருத்து தெரிவித்து உள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் நாளை முதல் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்து உள்ளது.
மேலும், ஞாயிற்றுக்கிழமை முதல் சனிக்கிழமை வரை 7 நாட்களும், ஒவ்வொரு வண்ணங்களில் ஆன 7 வண்ணங்களில் டோக்கன் வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.