சென்னை:

மிழகத்தில் இன்று முதல் வாகன ஓட்டிகள் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பபட்ட வழக்கில் ஒரிஜினல் டிரைவிங் லைசென்ஸ் வைத்திருக்க தேவையில்லை என்று சென்னை ஐகோர்ட்டுகருத்து தெரிவித்து உள்ளது.

மேலும் பிற்பகலில் இதுகுறித்து அரசு அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே ஆகஸ்டு 30ந்தேதி  நடைபெற்ற விசாரணையின்போது வாகன ஓட்டிகள் கண்டிப்பாக ஒரிஜினல் லைசென்சு வைத்திருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்ட ஐகோர்ட்டு தற்போது, தேவையில்லை என்ற கருத்தை தெரிவித்து உள்ளது.