சென்னை:

போதை மருந்து கடத்தியதாக சென்னையைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ஏ.நாகராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் சென்னை ஆர் கே நகர் தொகுதியில்  38-வது வட்ட  அ.தி.மு.க. செயலாளராக பொறுப்பு வகிக்கிறார். இவர் நீண்ட நாட்களாக போதை மருந்து கடத்தலில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வேலூர் மாவட்ட காவல்துறையினர், நாகராஜனை சுற்றி வளைத்து கைது செய்தனர். இவருடன்,  ஸ்டீபன் சக்ரவர்த்தி,  கணேஷ், காஜிமுகமது,  சதீஷ் (எ) மணி,   கணேஷ் (எ) கட்டத்தொட்டி கணேஷ் ஆகிய ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

தற்போது இவர்கள் ஆறு பேரையும் வேலூர் சுங்குவாசத்திரம் காவல் நிலையத்தில் வைத்து போலீசார் தீவிர விசாரணை செய்துவருகிறார்கள்.