ஐதராபாத்,

தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நடிகை முமைத்கான் அட்ரஸ் தெரியாததால், பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளருக்கு ஐதராபாத் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

இது தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திராவை கலக்கிய போதை பொருள் கடத்தல் வழக்கில், நடிகர், நடிகைகள் சம்பந்தப்பட்டு உள்ளதாக கூறப்பட்டது.  அதைத்தொடர்ந்து ஒருசில தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

போதை பொருள் கடத்தல் வழக்கில் நடிகை முமைத்கானுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்பட்டது.  இதையடுத்து,  நடிகை முமைத்கானின் அட்ரஸ் தெரியாததால் அவர் கலந்துகொண்டுள்ள பிக்பாஸ் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, போதை பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள, தென்னாப்பிரிக்கா வைச் சேர்ந்த கெல்வின் என்பவர் ஐதராபாத்துக்கு போதை பொருட்களை கடத்தி வந்து பியூஸ் என்பவர் மூலம் நடிகர், நடிகைகளுக்கு சப்ளை செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்தார்.

அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டதில், அவருடன் ஏராளமான  நடிகர், நடிகைகள் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது.

இந்த போதை பொருள்  விவகாரத்தில் நடிகர்கள் நவ்தீப், நடிகைகள் சார்மி, முமைத்கான் உள்பட திரையுலகை சேர்ந்த 12 பேருக்கு, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி நேரில் ஆஜராக அழைப்பு விடுத்துள்ளனர்.

இந்நிலையில், தெலுங்கு படங்களில் நடித்துவரும் மும்பையை சேர்ந்த நடிகை முமைத்கானின் அட்ரஸ் தெரியாததால், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டுள்ளது தெரிய வந்ததால், பிக்பாஸ் நிகழ்ச்சி தயாரிப்பாளரிடம் சம்மன் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில்,  வரும் 27-ம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாக முமைத்கான் விசாரணைக்கு ஆஜராவார் என்று நம்புவதாக போலீசார் கூறி உள்ளனர்.