குடிமகன் சொருகிய  குவாட்டர் பாட்டில்..

நாகப்பட்டினத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் , போதை தலைக்கு ஏறிய நிலையில் என்ன செய்தார் தெரியுமா?

குடித்து முடித்த பாட்டிலை, எங்கே போடுவது என்று இடம் தேடினார். சரியான இடம் கிடைக்காததால், தனது ஆசன வாய்க்குள் திணித்துள்ளார்.

அந்த பாட்டில் இடம் பெயர்ந்து மலக்குடலுக்குள் சென்றுள்ளது.

மறுநாள் அடி வயிற்றில் கடுமையாக வலித்ததால், நாகையில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

குடிபோதையில் தான் செய்த ’’காரியத்தை’’ டாக்டர்களிடம் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்ரே எடுத்துப் பார்த்தபோது, குவாட்டர் பாட்டில் மலக்குடலில் சிக்கி இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, இளைஞரின் குடலில் இருந்து பாட்டிலை எடுத்துள்ளனர், டாக்டர்கள்.

‘’ பாட்டில் உடைந்திருந்தால்,அவரது கதியே வேறு’’ என்கின்றனர், அரசு மருத்துவமனை, டாக்டர்கள்.