சென்னை

னகாபுத்தூரில் குடிபோதையில் 9 நாய்க்குட்டிகளை கட்டையால் அடித்து  ஒருவர் கொலை செய்துள்ளார்.

சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் உள்ளது வெங்கடேஸ்வரா நகர்.  இங்குள்ள அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் தெரு நாய் ஒன்று 9 குட்டிகளை சில நாட்கள் முன்பு ஈன்றுள்ளது.   இதே பகுதியில் வசிக்கும் குணா என்பவர் குடிபோதையில் அந்த வழியாக சென்றுள்ளார்.   அப்போது அந்த நாயும் அதன் குட்டிகளும் அவரைப் பார்த்து குரைத்துக் கொண்டே இருந்தன.

இதனால் ஆத்திரம் அடைந்த குணா ஒரு உருட்டுக் கட்டையை எடுத்து 9 நாய்க்குட்டிகளையும் அடித்துக் கொன்றுள்ளார்.   அத்துடன் அவர் அந்த இறந்த நாய்க்குட்டிகளை குப்பைத் தொட்டியில் வீசி உள்ளார்.   சத்தம் கேட்டு வெளியே வந்த அந்த் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் கார்த்திக் ராஜ் என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

கார்த்திக் ராஜ் அளித்த புகாரின் பேரில் சங்கர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.