டப்பா

டப்பா மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் குளிர் காய்ந்துக் கொண்டிருத்த ஒரு குடும்பத்தினர் மீது  வாகனம்   மோதியதில்  நால்வர் மரணம் அடைந்துள்ளனர்.  குடிபோதையில் இருந்த  ஓட்டுனரும் மரணம் அடைந்துள்ளார்.

ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் புது வருடக் கொண்டாட்டம் நடந்துள்ளது.   அந்தச் சமயத்தில்  பலரும் குடிபோதையில் வாகனம் செலுத்தி உள்ளனர்.   காவல் துறையினர் ஆங்காங்கே சோதனை சாவடிகள் அமைக்கபட்டு அவர்களைப் பிடித்து வழக்கு பதிந்துள்ளனர்.  அந்த வாகனங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வருடப் பிறப்பன்று.   கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒரு நகரத்தில்  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தெரு ஓரத்தில்  தீ வளர்த்து குளிர் காய்ந்துக் கொண்டிருந்தனர்    அப்போது அதே வழியில் ஒரு இளைஞர் குடி போதையில் வாகனம் ஓட்டிகொண்டு வந்துள்ளார்.    மிகவும் போதையுடன் இருந்ததால் அவரால் க்ட்டுப்படுத்த முடியாமல் அந்த குடும்பத்தின் மீது வாகனத்தை மோதி உள்ளார்.  இந்த விபத்தில் குடும்பத்தை சேர்ந்த நால்வர் சம்பவ இடத்திலேயே  உயிர் இழந்துள்ளனர்.

இந்த விபத்துக்குப் பிறகும் அந்த இளைஞரால் வாகனத்தை கட்டுப்படுத்த தாறுமாறாக  வாகனத்தை செலுத்தி உள்ளார்.   அதனால் அருகில் இருந்த சுவற்றில் வாகனம் மோதியது.   அதையொட்டி அந்த வாகனத்தை செலுத்திய இளைஞர் அங்கேயே மரணம் அடைந்துள்ளார்.    இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்