ஒசூர்:

ஓசூரில் இருந்து பெங்களூருக்கு சாய்ராம் (வயது 53) என்பவர் தனது மனைவி அம்சாவுடன்(வயது 48) காரில் சென்று கொண்டிருந்தார். வழியில் காரின் உள்ளேயே இருவரும் மது குடித்துள்ளனர். போதை தலைக்கேறியதும் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையானது.

சண்டையில் சாய்ராம் அம்சாவை அடித்தார். இதில் ஆத்திரமடைந்த அம்சா காரில் இருந்த துப்பாக்கியை எடுத்து சாய்ராமை சராமரியாக சுட்டார். இதில் சாய்ராம் வயிற்றில் குண்டு பாய்ந்தது. அதிர்ச்சியடைந்த சாய்ராம் காரில் இருந்து இறங்கி பேருந்து ஒன்றை பிடித்து தப்பி சென்றார்.

அம்சா அவரை விடாமல் காரை துரத்திச் சென்று பேருந்தை மடக்கினார். பேருந்தில் ஏறி சாய்ராமை கொலை செய்ய முயற்சித்துள்ளார். பேருந்தில் இருந்த பயணிகள் அம்சாவிடம் இருந்து சாய்ராமை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்ந்தனர். அம்சாவை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.