சென்னை:

மிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கொலை செய்யப்படவில்லை. தற்கொலைதான் செய்து கொண்டார் என சிபிஐ அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது போலீசாரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சாதீய பாகுபாடு காரணமாக தற்கொலை செய்துகொண்ட, என்ஜினீயரிங் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கை விசாரித்து வந்த நாமக்கல் டி.எஸ்.பி. விஷ்ணுப்பிரியா கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய. டிஎஸ்பி விஷ்ணு பிரியாவுக்கு மேலதிகாரிகள் கொடுத்த அழுத்தம் காரணம் என்றும், நேர்மை யாக விசாரணை நடத்தி வந்த தனது மகளின் தற்கொலையில் காவல் அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது என்று அவரது தந்தை ரவி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணை நடத்தி வந்த நிலையில்,  சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவிடக் கோரி விஷ்ணு பிரியாவின் தந்தை ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்த இந்த வழக்கு சிபிஐ தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து கடந்த 2 வருடங்களாக சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்நிலையில், கோவை நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பு இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அதில் டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரணம் கொலை அல்ல. அவர் தற்கொலையே செய்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகள் யாருமில்லை என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது விஷ்ணுப்பிரியா உடன் வேலை செய்த சக போலீசாரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.