ஜோகன்னஸ்பர்க்: இந்தியாவிற்கு மீண்டும் சுற்றுப்பயணம் செய்யவுள்ள தென்னாப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், டூ பிளசிஸ் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு சிறிய இடைவெளியில் மீண்டும் வருகை தரவுள்ளது தென்னாப்பிரிக்க அணி. மொத்தம் 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது அந்த அணி.

முதல் போட்டி, மார்ச் 12ம் தேதி தர்மசாலாவில் தொடங்குகிறது. மேலும், அடுத்த 2 போட்டிகள், 15 மற்றும் 18ம் தேதிகளில், முறையே லக்னோ மற்றும் கொல்கத்தாவில் நடைபெறவுள்ளன.

இந்தியாவில் ஆடவுள்ள தென்னாப்பிரிக்க அணியில், உலகக்கோப்பை தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் இதுவரை ஆடாத டூ பிளசிஸ் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. காயம் காரணமாக முக்கிய வேகப்பந்து வீச்சாளர் ரபாடா இடம்பெறவில்லை.

தென்னாப்பிரிக்க அணி விபரம்: குவின்டன் டி காக்(கேப்டன்), பவுமா, வான் டெர் டுஸென், டூ பிளசிஸ், கைல், கிளாசன், மில்லர், ஸ்மட்ஸ், பெலுக்வாயோ, லுங்கிடி, சிபம்லா, ஹென்ரிக்ஸ், நார்ட்ஜே, ஜார்ஜ் லிண்டே மற்றும் கேஷவ் மகராஜ்.