மக்ஞா, இமாசலப் பிரதேசம்

மாசலப் பிரதேச மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் ஒரு ராணுவ வீரர் மரணம் அடைந்துள்ளார்.

இமாசலப் பிரதேச மாநில கின்னவுர் மாவட்டத்தில் அமைந்துள்ளது நமக்ஞா.   இது திபெத்திய  எல்லை பகுதியை ஒட்டிய இடமாகும்.   இங்கு ராணுவ வீரர்கள் தொடர்ந்து காவலில் இருப்பது வழக்கமாகும்,    இங்கு கடும் பனிப்பொழிவு உள்ளது.    தற்போது இங்கு நான்கு அங்குல உயரத்துக்கு பனி படர்ந்து காணப்படுகிறது/

நேற்று திடீரென இந்த பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.   அதனால் இங்கிருந்து ராணுவ வீரர்கள் பனியில் சிக்கிக் கொண்டுள்ளனர்.    இங்கு உறைநிலைக்கு 15 டிகிரிகள் குறைவான உஷ்ண நிலை உள்ளது.  பனியில் சிக்கிக் கொண்ட வீரர்களை மீட்க அங்குள்ள 250 வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

அதில் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனை எடுத்துச் செல்லும் போது வழியில் மரணம் அடைந்துள்ளார்.    இன்னும் சுமார் 6 பேர் காணாமல் போய் உள்ளனர்.  அவர்களை பனியில் இருந்து மீட்கும் நடவடிக்கைகள் தீவரமாக நடைபெறுகிறது.

இந்தப் பகுதியில் பனிச்சரிவு ஏற்படுவது இதுவே முதல் முறையாகும்.