கோவை

கொரோனா அச்சம் காரணமாக 15 பேருடன் எளிமையாக ஒரு திருமணம் நடந்துள்ளது.

வாழ்வில் ஒரு முறை நடைபெறும் திருமணம் விமர்சையாக நடைபெற வேண்டும் என்பது பல இளைய தலைமுறையினரின் விருப்பம் ஆகும்.  உற்றார் உறவினர், நண்பர்கள் என நூற்றுக் கணக்கானோர் கூடி இருக்க தங்கள் திருமணம் நடைபெற வேண்டும் என்பதில் பலரும் விருப்பமாக உள்ளனர்.

இந்நிலையில் கோவை காளாம்பாளையத்தில் ஒரு கோவிலில் எளிய முறையில் 15 பேருடன் ஒரு திருமணம் நடந்துள்ளது.   கருப்பசாமி மற்றும் மீனாட்சி ஆகியோரின் திருமணம் நடைபெற இருந்த வேளையில் தேசிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.   இதையொட்டி திருமணத்தை எளிய முறையில் நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

அதன்படி விமர்சையாக திருமணம் நடக்க வேண்டும் என்னும் எண்ணத்தைத் துறந்து எளிமையாக 15 பேருடன் கருப்பசாமி மற்றும் மீனாட்சி தங்கள் திருமணத்தை நடத்தி உள்ளனர்.   அவர்களை உற்றார் உறவினர் நண்பர்களுடன் இணைந்து நாமும் இங்கிருந்தே வாழ்த்துவோம்.