பிரதாப் குடும்பத்தைப்  பதற வைத்த ‘இடியட்’..


பிரபல நடிகரும், இயக்குநருமான பிரதாப் போத்தனின் 80 வயது சகோதரி இத்தாலியில் வசித்து வந்தார்.

கணவனும், மகனும் சில ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டனர்.

கேரள மாநிலம் அலுவாவில் அவருக்குச் சொந்தமான வீடு உள்ளது.. இப்போது அங்கு தான் தங்கியுள்ளார்.

சென்னையில் வசிக்கும் பிரதாப் போத்தன், தன்னுடன் சென்னையில் தங்கி இருக்குமாறு பலமுறை கூறியும், இங்கே வர மறுத்து விட்டார்.

அவருக்கு, பிரதாப் போத்தன் பேசுவது போல் ஒரு ஆசாமி செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளான்.

போனில் பேசும் போது அடிக்கடி இருமியுள்ளான்.

பின்னர் போனை வைத்து விட்டான்.

’ தம்பியை கொரோனா பாதித்திருக்குமோ ?’’ என்று பதறிப்போனார், பிரதாப் அக்கா.

சென்னையில் பிரதாப்பை  போனில் தொடர்பு கொண்டு அவர் விசாரித்த போது தான் –

யாரோ ஒருவன் பிரதாப் போத்தன் குரலில், அவரது சகோதரியிடம் வம்பு செய்தது தெரிய வந்தது.

இதனைத்  தனது முகநூலில் வேதனையுடன் பதிவு செய்துள்ள பிரதாப்,’’ என் சகோதரிக்கு போன் செய்த ‘இடியட்’டை நான் கண்டு பிடித்து விட்டேன். அவன் திருவனந்தபுரத்தில் இருக்கிறான். மீண்டும் அவன் வம்பு செய்தால் நடவடிக்கை எடுப்பேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

– ஏழுமலை வெங்கடேசன்