தராபாத்

வறான கொரோனா பரிசோதனை கருவியால் தமக்கு கொரோனா உறுதி செய்யப்படடதாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு நாட்டில் பெருமளவு அதிகரித்து வருகிறது. பல பிரபலங்களும் கொரோனாவால் பாதிப்பட்டு வருகின்றனர். தினசரி ஒரு பிரபலம் கொரோனாவால் பாதிக்கபப்ட்டுள்ளதாக செய்திகள் தவறாமல் வெளிவருகின்றன . அவ்வகையில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.

இது அவருடைய ரசிகர்களை மிகவும் துயரத்தில் ஆழ்த்தியது. இந்த பரபரப்புக்கு இடையே சிரஞ்சீவி ஒரு டிவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் தமக்கு மூன்று மருத்துவர்கள் வேறு வேறு விதமான பரிசோதனைகள் செய்து தற்போது தமக்கு கொரோனா பாதிப்பு இல்லை என தெரிவித்துள்ளார். முதலில் வந்த முடிவுகள் தவறான கொரோனா பரிசோதனை கருவியால் வந்த முடிவு என தெரிவித்துள்ளார்.

அவருடைய இந்த டிவிடடர் பதிவு ரசிகர்களை மட்டுமின்றி பல திரை பிரபலங்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவருக்கு டிவிடடரில் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.