சென்னை

சென்னையில் திருவான்மியூர், வேளச்சேரி மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 5 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மின்சார வாரியம் நாளை நகரில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது. ஆகவே அந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை என பத்திரிகை அறிவிப்பு ஒன்றை மின் வாரியம் வெளியிட்டுளது. பராமரிப்புப் பணிகள் 5 மணிக்கு முன்பு முடிவடைந்தால் மின்சார சப்ளை அப்போதிருந்து மின் சப்ளை அளிக்கப்பட உள்ளது.

வேளச்சேர் : மேற்கு மற்றும் மத்திய பகுதிகள்
100 அடி பைபாஸ் சாலை, வெங்கடேஸ்வரா நகர், லட்சுமி நகர், வடிவாம்பாள் நகர், எம்ஜிஆர் நகர், ஓரண்டி அம்மன் கோவில் தெரு.

திருவான்மியூர், சாஸ்திரி நகர், மற்றும் வால்மீகி நகர் பகுதிகள்
சீவார்ட் சாலை ( 1 மற்றும் 3), பாலகிருஷ்ணா சாலை, ஜெயராம் நகர், குப்பன் பீச் சாலை, ராஜா சீனிவாசநகர் மெயின் ரோடு, டிச்சர்ஸ் காலனி 1 முதல் 4 நான்கு தெருக்கள், வேம்புலி அம்மன் கோவில் தெரு, சிஜிஈ காலனி, எல் பி சலை, காமராஜ் நகர், கல்வாய் சாலை, ரங்கநாதபுரம், ஜட்ஜ் அவின்யூ, ரத்தினம் நகர், மங்களேரியில் ஒரு பகுதி, ஈசிஆர் அப்பாசாமி அடுக்கககம், ராஜாஜி நகர், நாதன் காம்பிளெக்ஸ், டி என் எச் பி காலனி.

காந்தி நகர் பகுதிகள்
காந்தி நகர் இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதான சாலை, இரண்டாவது குறுக்கு தெரு.

தண்டையார்பேட்டை
கார்பரேஷன் நகர், ஜேஜே நகர், சுதந்திரபுரம், சிகிரந்தபாளையம், மோட்சபுரம், மேனாம்பாள் நகர், பாரதி நகர், டி என் எஸ் சி பி குடியிருப்பு, ஜீவா நகர், டிரைவர் காலனி, எண்ணூர் நெடும் சாலை, தியாகப்பா செட்டி தெரு.

கே கே நகர்
திருவள்ளுவர் சாலை, மாரியம்மன் கோவில் தெரு, கிழக்கு மற்றும் மேற்கு வன்னியர் தெரு, ஆர் கே சண்முகம் சாலை, அண்ணா நெடும் சாலை, ஆறாம் பிரிவு, சன்னை சத்திய நகர், கன்னியம்மன் கோவில் தெரு.

ஆகிய பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.