சென்னை

ண்டவாள புதுப்பிதல் பணி காரணமாக 5 நாட்களுக்கு ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

காட்பாடி மற்றும் அரக்கோணம் பிரிவில் சித்தேரி முதல் மகேந்திரவாடி இடையே உள்ள ரெயில் தடத்தில் தண்டவாளம் புதுப்பிக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் மே 12 அதாவது இன்று முதல் மே 17 ஆம் தேதி வரையில் ரெயில் சேவைகளில் மாற்றம் செய்யபட்டுள்ளது. இந்த மாற்றம் மே 15 அன்று கிடையாது. எனவே 5 நாட்களுக்கு சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று லக்னோ-யஸ்வந்த்பூருக்கு இயக்கப்படும் அதி விரைவு ரயில் சித்தேரியில் இரண்டரை மணி நேரம் நின்று செல்லும். ஹளரா-யஸ்வந்த்பூருக்கு இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் சித்தேரியில் 85 நிமிஷம் நின்று செல்லும். வேலூருக்கு அரக்கோணத்தில் இருந்து மதியம் 1.45 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரெயில் அரக்கோணத்தில் 20 நிமிடம் தாமதிக்கப்படும்.

நாளை ஹளரா-யஸ்வந்த்பூருக்கு இயக்கப்படும் துரந்தோ விரைவு ரயில் சித்தேரியில் 85 நிமிஷம் நின்று செல்லும். அரக்கோணம்-வேலூருக்கு மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் அரக்கோணத்தில் 20 நிமிஷம் தாமதமாகும். அத்துடன் இதைப் போலவே மற்ற தேதிகளிலும் சில ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.