திருமாவளவன் மற்றும் வைகோ குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ள கருத்து, திமுக கூட்டணியில் புதிதாக சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பு, சட்டசபை, பொதுக்குழு என எங்கு சென்றாலு எப்போதும் தனது நக்கலான பேச்சால் கவர்பவர். சில சமயம் இவரது நக்கல் பேச்சு காயப்படுத்தும் வகையில் இருக்கும். அப்படி ஒரு சம்பவம் தான் இப்போது நடந்துள்ளது.

சமீபத்தில் திமுக கூட்டம் ஒன்றில் கலந்துக்கொண்டு பேசிய அவர், “நம் கட்சித் தலைவர் ஸ்டாலினை எதிர்த்தவர்கள் எல்லம், இன்றைக்கு நமது தயவால் எம்.பி ஆகியுள்ளனர். இதற்கு ஸ்டாலினின் சாமர்த்தியம் தான் காரணம். ஆனால் ஸ்டாலிக்கு போதிய பக்குவம் இல்லை என்கிறார்கள். பக்குவம் இல்லாமல் தான் எதிர்த்தவர்களை கூட்டணிக்குள் கொண்டுவந்தாரா ? பக்குவம் இல்லாமல் தான் எங்கள் தயவால் அவர்கள் எம்.பிக்களாகியுள்ளனரா ?” என்று பேசியிருந்தார்.

இது மதிமுக பொதுச்செயலாளர் வைகோவையும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும் தாக்கி பேசியதாக பார்க்கப்படுகிறது. அதேநேரம், இவ்விவகாரத்தை பெரிதுப்படுத்த வேண்டாம் என்று திமுக தலைமை அறிவுருத்தியுள்ளது.