சேலம்:

தேர்தல் பிரசாரத்தின்போது அன்புமணியிடம் கேள்வி எழுப்பிய தொண்டர் ஒருவரின் வாயில் குத்தி  கட்சியினர் அடாவடி செய்தது பெரும் பரபரப்பபை ஏற்படுத்தி உள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக கூட்டணியில் பாமகவும் இணைந்துள்ளது. பாவேக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிமுக வேட்பாளர் உள்பட கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

நேற்று அவரது தொகுதியான கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்கு சேகரித்தார். அவருக்கு ஆதரவாக அதிமுக முன்னாள் அமைச்சர் செம்மலை பிரசாரம் மேற்கொண்டார். சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே வேட்பாளர் அன்புமணி ராமதாசுக்கு சிந்தாமணியூரில் பகுதியில்  வாக்கு சேகரித்தபோது, அந்த பகுதியை சர்ந்த ஒரு ஒருவர்,  5 ஆண்டுகளாக எங்கே போனீரு என்று  கேள்வி எழுப்பி, பாமக அதிமுகதொண்டர்கள்  அவரை முகத்திலும், வாயிலும் சரமாரியாக தாக்கி இழுத்து தள்ளினர்.

தாக்குதலால் மயங்கி விழுந்தவரை, சிலர் தண்ணீர் தெளித்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கேள்வி கேட்டதால்,  பாமக தொண்டர்களிடம்  அடி வாங்கும் வீடியோ….