https://www.instagram.com/p/B23cLVtBa7k/?utm_source=ig_embed&utm_campaign=dlfix

கிளி ஒன்று திருட்டு வழக்கு சம்பந்தமாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளது .

திருட்டு குற்றச்சாட்டின் போது கிளியின் உரிமையாளர் கிளியை தனது தோளில் வைத்திருந்ததால் கிளியின் உரிமையாளருடன் சேர்த்து கிளியையும் நெதர்லாந்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில், Politie Utrecht Centrum என்ற கணக்கு இச்சம்பவம் தொடர்பான புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். இது டச்சு காவல்துறையின் அதிகாரப்பூர்வ கணக்கு ஆகும்.

படத்தில், கிளி சிறைக்குள் உட்கார்ந்து இருக்க, அதற்கு ஒரு ரொட்டி மற்றும் தண்ணீரை காவல்துறை வைத்திருப்பது சமூகவலைத்தளத்தில் வைரலாகி பரவி வருகிறது.