சென்னை: மத்தியஅரசு இ-பாஸ் நடைமுறைக்கு விடைகொடுத்துள்ள நிலையில், தமிழகத்தில் இபாஸ் முறை தொடர்ந்து வருகிறது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில்,  மனித உரிமை மீறலாகாதா என மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு 7வது கட்டமாக ஆகஸ்டு 31ந்தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே வேளையில்அவசர தேவைக்காக மட்டும் அரசிடம் இ-பாஸ் பெற்றுச் செல்லலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனால்,  ஏராளமானோல்ர அவசர தேவைகளுக்காக  இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து இ-பாஸ் இனி, பணி, வியாபாரம் மற்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் ஆகிய பிரிவுகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. எனவே, வழக்கமாக வழங்கப்படும் இபாஸ்களை விட 36 சதவீதம் அதிகமாக பாஸ்கள் வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி அறிவித்திருந்தார்.

 இந்த நிலையில், மத்திய அரசின் விதிகளை மீறி இ-பாஸ் முறையை தொடர்வது மனித உரிமை மீறலாகாதா? என கேள்வி எழுபியுள்ள மனித உரிமை ஆணையம்  தமிழக தலைமைச் செயலாளர் 4 வாரங்களில் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.