சென்னை:

மிழகத்தில் பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 24 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிதிஉதவி வழங்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர் என்பவரின் மகன் ஜெயகாந்த் என்பவர் எதிர்பாராத விதமாக அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்,

விக்கிரவாண்டி வட்டம், சாமியாடிகுச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கையன் என்பவரின் மகன் ராமச்சந்திரன் என்பவர் விவசாய நிலத்திற்கு சென்ற போது அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

செஞ்சி வட்டம் சேரனூர் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் ஜெனகன் என்பவர் மின் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

வேலூர் மாவட்டம் மற்றும் வட்டம், பலவன்சாத்து கிராமத்தைச் சேர்ந்த பானுமதி என்பவரின் மகன் சதீஷ்குமார் என்பவர் தனது வீட்டின் மாடிக்குச் சென்ற போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பெருகமணி கிராமத்தில் உள்ள உயர் நிலைப் பள்ளியில் பயின்று வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தி என்பவரின் மகன் சிறுவன் அஸ்வின்குமார் அறுந்து விழுந்த மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சென்னை மாவட்டம், பெரம்பூர் வட்டம், வியாசர்பாடியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் முருகன் என்பவர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவள்ளுர் மாவட்டம், இரா.கி. பேட்டை வட்டம், அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த அருணாச்சலம் என்பவரின் மகன் குமரன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி கீழே விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டம், ரெட்டிவலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரின் மனைவி கமலா என்பவர் விவசாய நிலத்தில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நெமிலி வட்டம், கீழ்க்களத்தூர் மதுரா மானாமதுரை கிராமத்தைச் சேர்ந்த தனபாக்கியம் என்பவரின் கணவர் சேகர் என்பவர் விவசாய நிலத்தில் மின் கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

வாலாசா வட்டம், தொண்டமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் பிரேம்குமார் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

வாலாசா வட்டம், சாணார்பெண்டை கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா என்பவரின் கணவர் லட்சுமணன் என்பவர் அறுந்து விழுந்து மின் கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டம், பெருமாளகரம் கிராமத்தைச் சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் நாடிமுத்து என்பவர் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த போது, மின் கம்பி அறுந்து விழுந்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் வட்டம், பேச்சிப்பாறை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணதாஸ் என்பவரின் மகன் சுபாஷ், சதீஷ்குமார் என்பவரின் மகன் சஜின் சலோ மற்றும் ரோலண்ட் ரமேஷ் என்பவரின் மகன் மன்மோகன் ஆகிய மூன்று நபர்களும் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர்கள் என்ற செய்தியையும்;

திருவண்ணாமலை மாவட்டம், செய்யார் வட்டம், நெடுங்கல் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சம்பத் என்பவர் விவசாய நிலத்தில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில், மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், திருவலம் கூட்ரோடு மின்வாரிய குடியிருப்பைச் சேர்ந்த சுபித்ரா என்பவரின் கணவர் மதன்குமார் என்பவர் மின்கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், பிராந்தியங்கரை கிராமத்தைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் பாலமுருகன் என்பவர் தெருவிளக்கு கம்பத்தில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

புதுக்கோட்டை மாவட்டம், கந்தவர்வகோட்டை வட்டம், காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மகன் அய்யப்பன் என்பவர் எதிர்பாரத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

சிவகங்கை மாவட்டம் மற்றும் வட்டம், இலுப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த மூக்கையா என்பவரின் மகன் ஆதித்யா என்பவர் விவசாய நிலத்தில் உள்ள நிலைக் கம்பியை பிடித்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டம், நஞ்சனாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பழனி என்பவரின் மகன் சண்முகசுந்தரம் என்பவர் மின்மாற்றியில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்கம்பத்திலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் வட்டம், கல்கிணற்றுவலசை கிராமத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவரின் மகன் கார்த்தீஸ்வரன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் வட்டம், மேலராஜகுலராமன் கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் என்பரின் மகன் ஆறுமுகம் என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும்;

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம், தேவதானம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மனைவி லட்சுமி என்பவர் பாம்பு கடித்து உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

மின்சாரம் தாக்கியும், பாம்பு கடித்தும் உயிரிழந்த 24 நபர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேற்கண்ட துயரச் சம்பவத்தில் உயிரிழந்த 24 நபர்களின் குடும்பத்திற்கு தலா மூன்று லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.