சிம்லா: இமாச்சலப் பிரதேச மாநிலத்தின் சிம்லாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவானது.

இமாச்சலப்பிரதேசத்தின் சிம்லாவில் இன்று மாலை 4.38 மணியளவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் 3.1 அலகுகளாக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் உயிர் இழப்போ, பொருள் இழப்போ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.