டில்லி,

டில்லியில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.  வீடுகள் குலுங்கியதால் மக்கள் அலறியடித்து வீட்டில் இருந்து வெளியேறி  தெருவுக்கு ஓடினார்கள்.

டில்லியில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4.7ஆக பதிவாகி உள்ளது.  இந்த  நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கியது. அதன் காரணமாக பீதி அடைந்த  மக்கள் அலறியபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்தனர்.

வடமாநிலங்களின் சில பகுதிகளில் இன்று காலை 4.20 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. சுமார் ஒரு நிமிடம் வரை நீடித்தது.

ஹரியானா மாவட்டத்தின் ரோட்டக் பகுதியில் நிலநடுக்கத்தின் மையப்புள்ளி உணரப்பட்டுள்ளது. இதனால் கட்டடங்கள் குலுங்கி வீட்டில் இருந்த பொருட்கள் உருண்டன.

ஏற்கனவே கடந்த மாதம் 28ம் தேதி ஜம்மு – காஷ்மீரின் பதர்வா மற்றும் தோடா ஆகியப் பகுதிகளில் இரண்டு முறை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டது.

மாலை 7.23 மணியளவில் 4.7 ரிக்டர் ஸ்கேலும் இதைத்தொடர்ந்து இரவு 7.48 மணிக்கு 3.2 ரிக்டர் ஸ்கேலும் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலநடுக்கத்தின் தொடர்ச்சி ஹரியானா மாநிலம் ரோதக் மாவட்டத்திலும் உணரப்பட்டது. அங்கு  காலை 8.13 மணிக்கு உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.2 ஆக பதிவாகியுள்ளது.