டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரகாண்ட் மாநிலத்தின் தெஹ்ரி கார்வால் எனும் இடத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மாலை சரியாக 6:18 மணி அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.  இது ரிக்டர் அளவில் 3.4 ஆக பதிவாகி இருக்கிறது.

நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதை தேசிய நிலநடுக்கவியல் மையம் உறுதிப்படுத்தி உள்ளது. அதன் காரணமாக ஏதேனும் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டுள்ளதா என்பது பற்றிய விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.