திஸ்பூர்: அசாமில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

அசாம் மாநிலம் சோன்டிபூர் மாவட்டத்தில் சனிக்கிழமை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 3.4 அலகுகளாக நிலநடுக்கம் பதிவானது.

இந்த தகவலை வெளியிட்டு உள்ள தேசிய நிலஅதிர்வு மையம் சோன்டிபூர் மாவட்டத்தில் தேஜ்பூரில் நிலநடுக்கம் பதிவானது என்று கூறி உள்ளது. நில நடுக்கம் 10 கி.மீ. ஆழத்தில் உணரப்பட்டதாகவும், உயிரிழப்புகளோ, சேதமோ ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் கிடைக்க பெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.