திஸ்பூர்: அசாமில் இன்று பிற்பகல் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது தொடா்பாக மாநில புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:அசாமின் நாகான் பகுதியில் திங்கள்கிழமை பிற்பகல் 1.49 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 3.7 ஆகப் பதிவானது. சுற்று வட்டாரப் பகுதி மக்கள் பலரும் நிலநடுக்கத்தை உணா்ந்தனா். ஆனால் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.