டில்லி:

ன்று காலை தலைநகர் டில்லி மற்றும் உ.பி. மாநிலத்தின் சில பகுதிகளில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இதன் காரணமாக பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.0 அளவில் பதிவாகி உள்ளது.

தலைநகர் டெல்லியில், இன்று காலை 7:50 மணியளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது. அதே நேரத்தில் உ.பி. மாநிலம் முஸ்சாபர்புர் நகரில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்திலும்  நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்த லேசான நிலநடுக்கம் காரணமாக எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலநடுக்கத்தை ஐரோப்பிய மத்திய தரைக்கடல் புவிசார் மையம் (EMSC) உறுதி செய்துள்ளது.

அதேவேளையில்,  இன்று காலை ஆசிய நாடான தஜிகிஸ்தானில் 4.6 அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டத .  நில நடுக்கத்தால் அங்குள்ள கட்டடிடங்கள் குலுங்கின. அந்நாட்டின் முக்கிய நகரங்களில் இந்த நில நடுக்கத்தின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

இதன் பாதிப்புதான் டில்லியில் ஏற்பட்ட நிலநடுக்கம் என கூறப்படுகிறது.