திஸ்பூர்: அசாம் மாநிலம் தேஸ்பூரில் இன்று மாலை 4.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதுதொடர்பாக தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: அசாம் மாநிலம் தேஸ்பூரின் வடமேற்கில் 17 கிமீ தூரத்தில் புதன்கிழமை மாலை 5.54 மணியளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது ரிக்டர் அளவில் 4.7 ஆகப் பதிவாகி உள்ளது. கவுகாத்தியிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.