காபூல்: ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு காபூலில் புதன்கிழமை மாலை ரிக்டர் அலகில் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அந்நாட்டின் வட கிழக்கு காபூலில் ரிக்டர் அலகில் 4.2 அளவில் லேசான நில நடுக்கம் ஏற்பட்டது.  மாலை 4.18 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் அப்பகுதி மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். நில நடுக்கத்தால் பொருட்சேதம், உயிர்சேதம் ஏதேனும் ஏற்பட்டதா என்று  தகவல்கள் வெளியாகவில்லை.