காசியாபாத்: உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 2.7 அலகாக பதிவானதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் கூறி உள்ளது.

காலை 4 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  5 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், அதன் காரணமாக  சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.