புதுக்கோட்டை:

பொன்னமராவதி கலவரத்தை தொடர்ந்து,  புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக பரபரப்பு நிலவி வருகிறது. அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ள நிலையில், 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

பொன்னமராவதி பகுதியில் ஏற்பட்ட கலவரத்தில், காவல்துறையினரின்  8 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.  பொதுமக்கள் ச 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். 3 காவல்துறையினரும் காயமடைந்துள்ள நிலையில்,  போலீஸார் தடியடி நடத்தி நிலைமை கட்டுபடுத்தினார்.

இதனால், பொன்னமராவதி பகுதியில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகளை மூட அம்மாவட்ட ஆட்சியர் உமா மகேஸ்வரி உத்தரவிட்டுள்ளார்.