சென்னை:

தூத்துக்குடியில் மக்கள் மீது நடைபெற்ற துப்பாக்கி சூடு தொடர்பாக தமிழகம் முழுவதும் போராட்டம் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில், சென்னை  ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை முதல்வர் பழனிச்சாமி சந்தித்து விளக்கம் அளிக்கிறார்.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று நடைபெற்ற  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்  மீது போலீசார்  துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இந்தத் துப்பாக்கிச்சூட்டில் நேற்று 12 பேர் உயிரிழந்தனர். மேலும், இன்று தூத்துக்குடி அண்ணாநகர் பகுதியில் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து, நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார், 5க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இதனால், தூத்துக்குடியில் பதட்டம் நீடித்து வருகிறது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

இந்த சம்பவம் காரணமாக, ஊட்டியில் முகாமிட்டிருந்த கவர்னர் பன்வாரிலால் உடனடியாக சென்னை திரும்பினார். நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்திக்கிறார்.

இந்த நிலையில், டிஜிபி ராஜேந்திரனும் ஆளுநரை சந்திக்க ராஜ்பவன் வந்துள்ளார்.