சென்னை:

மிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மிதமானது முதல் கனமழை  பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், தமிழகம், புதுச்சேரியில் 10 மாவட்டங்களுக்கு ஆர்ஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

வடகிழக்கு பருவமழை, மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில், மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது

இதுகுறித்து தெரிவித்துள்ள வானிலை மையம்,  கிழக்கு திசை காற்றின் காரணமாக கடலோர மாவட்டங்களில் நிலவும் மேல் அடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும்,  நாளையும், நாளை மறுநாள் தமிழகத்தில் உள்ள கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை மற்றும் மிக கன மழை பெய்யவாய்ப்பு உண்டு.

இன்று கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் சில இடங்களில் கன மழை பெய்யவாய்ப்பு உள்ளது என்று அறிவித்துஉள்ளது.

கனமழை காரணமாக இன்று சென்னை , நாகை , காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு உட்பட 7 மாவட்டங் களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை கொடுக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள சில மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ கொடுக்கப்பட்டு உள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய வானிலை மைய இயக்குனர் புவியரசன்,  தமிழக கடற்பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யும்.

கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும். நாளையும், நாளை மறுநாளும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யும்; சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில், மிக கன மழையும் பெய்யலாம்.சென்னையில் இன்று, மிதமானது முதல், கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

மிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ள, 10 மாவட்டங்களுக்கு, ‘ஆரஞ்ச் அலெர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

தென்மேற்கு வங்க கடல் மற்றும் குமரி கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் சூறாவளி காற்று வீச வாய்ப்புள்ளது.மாலத்தீவு பகுதிகளில், நாளை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.