சென்னை:

மிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நாளை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளப்பெருக்கு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்த உள்ளார். கூட்டத்தில் அதிக மழைபொழிவிற்கு வாய்ப்புள்ள மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அப்புறப்படுத்துதல், அணைகளுக்கு வரும் நீர்வரத்தினை கண்காணித்தல், கரையோர மக்களுக்கான முன்னெச்சரிக்கை, நோய் தொற்று ஏற்படாமல் தடுத்தல் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.