சேலம்: தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த 12–ந் தேதி  வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு காலமானார். அவரது மறைவு தொடர்பாக காரியம் (சாங்கியம்) இன்று நடைபெற்றது. முன்னதாக தவுசியம்மாளின் அஸ்தி காவிரியில் கரைக்கப்பட்டது.

சேலம் மாவட்டம்  எடப்பாடி, சிலுவம்பாளையத்தை சேர்ந்த மறைந்த கருப்பக் கவுண்டரின் மனைவியும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயாருமான கே.தவுசாயம்மாள் 12–ந் தேதி அன்று காலமானார். அம்மையாரின் மூன்றாம் நாள் காரியம் (சாங்கியம்) இன்று (15–ந் தேதி) சிலுவம்பாளையத்தில் உடல் தகனம் செய்யப்பட்ட இடத்தில் காரியம் (சாங்கியம்) நடைபெற்றது.
மயானத்திற்கு முதல் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் என ஏராளமானோர் காரியம் (சாங்கியம்) நடைபெற்ற இடத்திற்கு நடந்தே சென்று வந்தனர்.
முதலமைச்சரின் குடும்பத்தின், மூத்த சகோதரர் கே.கோவிந்தராஜூ சாங்கியத்தை செய்தார். அதன் பின்பு அம்மையாரது அஸ்தி காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முதலமைச்சரின் வீட்டிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.   அப்போது தவுசாயம்மாள் படத்திற்கு மாலை அணிவித்து படையலிடப்பட்டது. சிவாச்சாரியார்கள் சிறப்பு மந்திரங்களை ஓதினர். இதில் தவுசாயம்மாளின் மகள் விஜயலட்சுமி, மகன்கள் கோவிந்தராஜ், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அவரது மனைவி ராதா, மகன் மிதுன், மைத்துனர் வெங்கடேஷ் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில்  அமைச்சர்கள் செங்கோட்டையன், உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், எம்எல்ஏக்கள் வெங்கடாசலம், சக்திவேல், செம்மலை மற்றும் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர்.
இன்று மாலை சிலுவம்பாளையத்தில் இருந்து சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வருகிறார். நாளை கார் மூலம் சென்னை புறப்பட்டுகிறார். மறுநாள் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கும் அதிமுகவின் 49வது ஆண்டு தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் முதல்வர் கட்சி கொடியை ஏற்றி வைக்கிறார்.