சென்னை: திமுக ஆட்சியை விட எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி சிறப்பாக  இருக்கிறது என்று  சுப்பிரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன் சாமி சென்னையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை இன்று சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, “தமிழக நிலவரம் குறித்தும், டில்லியிலிருந்து எனக்கு கிடைத்த தகவல்கள் குறித்தும் ஆளுநர் பன்வாரிலாலுடன் ஆலோசித்தேன்.  திமுக ஆட்சியை விட, எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது.

திமுகவுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது.

தமிழகத்தில் பல பயங்கரவாத சக்திகள், மக்களின் பின்னால் ஒளிந்து கலவரத்தை ஏற்படுத்துகிறார்கள்” என்று சுப்பிரமணிய சாமி கூறினார்.