கிணத்துக்கடவு:
மிழகத்தில் அடுத்து திமுக ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்தனர்.

கிணத்துக்கடவு பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அடுத்து ஆட்சிக்கு வருவோம் என்று கூறும் திமுக என்று கூறுவதற்கு பதிலாக அடுத்து ஆட்சிக்கு வரும் திமுக நிறைவேற்றக்கூடிய திட்டங்களை வழங்க வேண்டும் என பேசினார். இதனால் அதிமுக தொடண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் கூட்டம் ஏராளமாக வருகிறது என்பதும் அவரது பேச்சை கேட்க பொது மக்கள் ஆவலுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இப்படி பேசியது அதிமுக தொடண்டர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.