திருவாரூர்:

“முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலினும் பொய்யர்கள்” என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக பேசியுள்ளார். அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் செயல்வீரர்கள் கூட்டம் இன்று திருவாரூரில் நடந்தது.

கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் கொடுமையான கூட்டணியை அமைத்துக் கொண்டு தமிழக மக்களை ஏமாற்றி வருகிறார்கள்.

மு.க ஸ்டாலின் சட்டசபையில் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் எதையும் பேசுவதில்லை. பெயருக்கு சில கதைகளை மட்டும் பேசிவிட்டு போய்விடுகிறார். எடப்பாடி பழனிச்சாமியின் அரசால் அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்களோ இல்லையோ.

. திமுகவினர் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். இவர்கள் இருவரும் பொய்யர்கள். இந்த இரண்டு பொய்யர்களும் சேர்ந்து தமிழக மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். இது அதிக நாள் எடுபடாது” என்று ஓ.பி.எஸ். பேசினார்.