சென்னை:

மீபத்தில் மாஞ்சா நூல் அறுத்து குழந்தை இறந்ததைத் தொடர்ந்து, வடசென்னை பகுதியில் மாஞ்சா நூல் விற்ற  மற்றும் மாஞ்சா நூல் காற்றாடி விட்ட  8 பேரை காவல்துறையினர்  கைது செய்துள்ளனர்.

கடந்த 3-ம் தேதி தனது தந்தையின் இருசக்கர வாகனத்தில் முன்னால் அமர்ந்து சென்று கொண்டிருந்த அபிநவ் என்ற குழந்தையின் கழுத்தை பறந்து வந்த காற்றாடியின் மாஞ்சா நூல் அறுத்தது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்தது.

இந்த கொடுமையான   சம்பவத்தை தொடர்ந்து 15 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, மாஞ்சா நூல் தயாரிப்பவர்கள் மாஞ்சா நூற் காற்றாடி விடுபவர்களை காவல்துறையினர் கண்காணித்து வந்தனர்.

இநத நிலையில், காசிமேடு, ஏ.ஜெ.காலனி 2-வது தெருவில் உள்ள பெட்டிக்கடையில் காற்றாடிகள் விற்பது கண்டுபிடிக் கப்பட்டது. கடையின் உரிமை யாளர் சார்லஸ் கைது செய் யப்பட்டார். மேலும், தண்டயார்ப் பேட்டை பகுதியில் மாஞ்சா நூல் பயன்படுத்தி காற்றாடி விட்ட செல்வ விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்த கிரண், வைத்தியநாதன் தெருவைச் சேர்ந்த சூர்யா, விக்னேஷ், ராகுல் ஆகியோரை தண்டை யார்ப்பேட்டை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 காற்றாடிகள், 3 மாஞ்சா நூல் சுற்றப்பட்ட லோட்டாய்கள் பறி முதல் செய்யப்பட்டன.

திருவொற்றியூர் அடுத்த திருச்சி னாங்குப்பம் பகுதியில் மாஞ்சா நூலை பயன்படுத்தி காற்றாடி பறக்கவிட்ட அப்பகுதியைச் சேர்ந்த கிரி என்ற முகேஷ், திரு வொற்றியூர் சாத்துமாநகரைச் சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகி யோரை கைது செய்தனர். அவர் களிடம் இருந்து 2 காற்றாடிகள் மற்றும் 2 மாஞ்சா நூல் சுற்றப்பட்ட லோட்டாய்கள் பறிமுதல் செய் யப்பட்டன.

மேலும்  புரசைவாக்கம் எஸ்.எஸ்.புரம் பகுதியில் ஒரு வீட்டில் மாஞ்சா நூல் மற்றும் காற்றாடிகள் வைத்திருந்த கர்ணா, என்பவர் கைது செய்யப்பட்டு, அவரிடம் இருந்து 4 காற்றாடிகள், 13 மாஞ்சா நூல் சுற்றப்பட்ட லோட்டாய்கள் பறிமுதல் செய் யப்பட்டன.

இதுவரை 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் பல இடங்களை கண்காணித்து வருகின்றனர்.